ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்து பாடகி சித்ரா ஒரு காணொளியில் பேசினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் அன்று அனைவரும் ஸ்ரீ ராமா, ஜெய ராமா, ஜெய ஜெய ராமா என்ற மந்திரத்தைக் கூறவேண்டும் என்றும், மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி கடவுளை வழிபட வேண்டும் என்றும் பாடகி சித்ரா ஒரு காணொளியில் பேசினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து குஷ்பு கூறியதாவது: “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் சகிப்பு தன்மை இல்லை. அவர்களுக்கு பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க தெரியவில்லை.பல வருடங்களாக கடவுளை வழிபட்டு வருகிறார் சித்ரா. ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்து சித்ரா அவர்கள் கூறிய கருத்துக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று புரியவில்லை. அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. வேண்டும் என்றே சித்ராவிற்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். நான் சித்ராவின் பக்கம் நிற்பேன்” என்றார்.