தரக்குறைவாகப் பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரை த்ரிஷா அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கூவத்தூர் விவகாரம் பற்றி பேட்டியளித்தபோது நடிகையைப் பற்றி அவதூறாகப் பேசினார் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ. தன்னைப் பற்றி தவறாகப் பேசியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நடிகை த்ரிஷா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது, த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக ராஜூ, காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகைகளை ஏ.வி. ராஜூ விமர்சித்தபோது தன்னையும் தொடர்புபடுத்தி பேசினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏ.வி. ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், ஒருநாளைக்கு தலா 5 லட்சத்துக்கு மேல் அச்சிடப்படும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கடிதத்தை வெளியிட வேண்டும். யூட்யூப் விடியோக்கள் மற்றும் இணைய ஊடகங்களிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் த்ரிஷா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.