அசாமில் பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டது

"அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளார்கள்."
அசாமில் பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டது
படம்: https://x.com/ani_digital
1 min read

அகர்தாலா - லோக்மான்யா திலக் விரைவு ரயில் அசாமில் திபலாங் ரயில் நிலையம் அருகே மாலை 3.55 மணியளவில் தடம்புரண்டது.

விபத்து பற்றி ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எஞ்ஜின் உள்பட 8 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இருந்தபோதிலும் உயிரிழப்புகள் நிகழவில்லை. யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை" என்றார்.

அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"அகர்தலா - லோக்மான்யா திலக் விரைவு ரயிலின் (12520) 8 பெட்டிகள் பிற்பகல் 3.55 மணியளவில் தடம்புரண்டது. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளார்கள். ரயில்வே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். மீட்பு ரயிலானது சம்பவ இடத்தை விரைவில் சென்றடையும். உதவி எண்கள் - 03674 263120, 03674 263126" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழியில் செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து மீட்புப் பணிகளுக்கான ரயிலும் விரைவில் சென்றடையவுள்ளதாகத் தெரிகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in