பாரிஸ் ஒலிம்பிக்: தடகளத்தில் சாதிக்குமா இந்திய அணி?

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 117 வீரர், வீராங்கனைகள் மொத்தம் 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக்
1 min read

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தடகளப் பிரிவில் இந்தியா சார்பாக 29 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.

இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இதில் 72 வீரர்கள் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்கின்றனர். தடகளப் பிரிவில் அதிகபட்சமாக 29 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 1 அன்று தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்த நீரஜ் சோப்ரா, இம்முறையும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

20 கி.மீ. நடை பந்தயம், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், 4*400 மீட்டர் உட்பட பல போட்டிகளில் மொத்தம் 29 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in