மகளிர் டேபிள் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மனிகா பத்ரா தகுதி!

ஒலிம்பிக்ஸில் இந்த நிலையை எட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மனிகா பத்ரா தகுதி!
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மனிகா பத்ரா தகுதி!@TheKhelIndia
1 min read

மகளிர் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மனிகா பத்ரா தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

3-வது நாளில் பாட்மிண்டன் காலிறுதிக்கு ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது.

மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், மகளிர் டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா அசத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொண்ட அவர், 11-9, 11-6, 11-9, 11-7 என்கிற புள்ளிகளை பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மனிகா பத்ரா தகுதி பெற்றுள்ளார்.

மேலும், ஒலிம்பிக்ஸில் டேபிஸ் டென்னிஸ் விளையாட்டில் இந்த நிலையை எட்டிய முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in