குத்துச் சண்டையில் பெண்ணுடன் மோதிய ஆண்?: ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!

இந்த ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நீடித்துள்ளது.
குத்துச் சண்டையில் பெண்ணுடன் மோதிய ஆண்?: ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!
குத்துச் சண்டையில் பெண்ணுடன் மோதிய ஆண்?: ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!
1 min read

ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில் பயாலஜிக்கல் ஆண் ஒருவர் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில் இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டம் 46 நொடிகள் மட்டுமே நீடித்த நிலையில், இமானே கெலிஃபின் முரட்டுத்தனமான ஒரு குத்துக்கு பிறகு கரினி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து கரினியின் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இனி விளையாட முடியாது என்று நடுவரிடம் கூறிவிட்டார்.

இதனால் கெலிஃப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினியை எதிர்த்து விளையாடியது ஒரு பயாலஜிக்கல் ஆண் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதித் தேர்வில் தோல்வியுற்றதால் கெலிஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in