ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த ‘அமரன்’ படம் கடந்த அக்.31 அன்று வெளியானது.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 42.3 கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘அமரன்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி.