வயநாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி

கிழக்கு நியூஸ்

வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புமனுவை பிரியங்கா காந்தி இன்று தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கலின்போது மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.