பொன்முடி அமைச்சராவதில் தாமதம்
பொன்முடி அமைச்சராவதில் தாமதம் 
தமிழ்நாடு

ஆளுநர் தில்லி பயணம்: பொன்முடி அமைச்சராவதில் தாமதம்

யோகேஷ் குமார்

ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குச் சென்றுள்ளதால் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதன் மூலம், அவர் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

இதன் பிறகு, பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் ஆளுநர், மூன்று நாள் பயணமாக இன்று தில்லிக்குச் சென்றுள்ளார். இதனால் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.