கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி  கி.வா.ஜ.
தமிழ்நாடு

கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி அறிவிப்பு

சிறுகதைகளை மார்ச் 10-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

யோகேஷ் குமார்

கி.வா.ஜ. சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வாகும் மூன்று கதைகளுக்குத் தலா ரூ. 6,000 பரிசுத்தொகை கொண்ட இப்போட்டி குறித்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கி.வா.ஜ. குடும்பத்தினரால் இப்போட்டி நடத்தப்படுகிறது. கி.வா.ஜ. சிறுகதைப் போட்டிகாக அனுபப்படும் கதைகள் கலைமகளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இக்கதை 900 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். சிறுகதைகளை மார்ச் 10-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கதைகளை டைப் செய்து அனுப்ப வேண்டும். இணையம் வழியாக அனுப்பக்கூடாது. கதைகளைப் பிரதி எடுத்துக்கொண்டு அனுப்பவேண்டும், கதைகள் திருப்பி அனுப்பப்படாது. ஆசிரியரின் முடிவே இறுதியானது. முடிவாக மூன்று கதைகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு சிறுகதைகளுக்கும் ரூ.6000 பரிசாக வழங்கப்படும்.

கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2024

களைமகள் மாத இதழ்

35/13, ராபர்ட்சன் சந்து, மந்தைவெளி, சென்னை - 600028.

என்று அறிவிப்பில் வெளியாகியுள்ளது.