கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

கிழக்கு நியூஸ்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

சிவகாசி அருகே காளயார்குறிச்சி என்கிற கிராமத்தில் முருகவேல் என்பவருக்குச் சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல வேலைக்கு வந்துள்ளார்கள்.

தொழிலாளர்கள் வெடி மருந்துகளைக் கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் பட்டாசு மருந்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். ஒரு பெண் உள்பட மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எம். புதுப்பட்டி காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.