ஆம்ஸ்ட்ராங்கின் 16-ம் நாள் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சியில், ஆம்ஸ்ட்ராங் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில், ஆம்ஸ்ட்ராங்கின் 16-ம் நாள் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்ற தலைப்பில் ஆம்ஸ்ட்ராங் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தை இயக்குநர் பா. இரஞ்சித் நீலம் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார்.