ANI
இந்தியா

இந்திய அணி வீரர்களுக்கு போனில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

ராம் அப்பண்ணசாமி

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. இது குறித்து தன் எக்ஸ் கணக்கில் அவர் பதிவிட்டார்.

`இந்திய அணியிடம் பேசினேன். அபாரமாக விளையாடி டி20 உலகக் கோப்பை வென்ற அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த தொடர் முழுவதும் தங்கள் திறமையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதில் பங்கேற்ற ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது’ என்று பதிவிட்டுள்ளார் பிரதமர்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார்.

அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.