தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஏழாவது நபரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10 அன்று கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கார் வெடிப்பு சம்பவத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிபடுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை, கார் வெடிப்பில் வெடிகுண்டு வைத்து விபத்துக்குள்ளான காரை வாங்கிக் கொடுத்து, அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி, ஜசிர் வானி உள்ளிட்ட இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தில்லி கார் குண்டு வெடிப்பு தொடர்புள்ள வழக்குகளில் காவல்துறையினரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அடீல் அஹமது, முசாமில் ஷகீல், ஷாஹீன் சயீத் மற்றும் இர்பான் அஹமது ஆகிய நால்வரைத் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன்மூலம் தில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று பரிதாபாத்தை சேர்ந்த சொயாப் என்ற நபரை ஏழாவது குற்றவாளியாக அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். தற்கொலைத் தாக்குதலை நடத்தியதற்கு ஒரு நாள் முன்பு வரை உமர் நபி, சொயாப் வீட்டில் தான் தங்கியிருந்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரைக் கைது செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
The National Investigation Agency has arrested a seventh person in the car bomb blast case near Delhi's Red Fort and is intensifying its investigation.