பிரதமர் மோடி @Narendra Modi
இந்தியா

கார்கில் போருக்குப் பிறகும் பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை: பிரதமர் மோடி

யோகேஷ் குமார்

கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கார்கில் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார்.

1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தினத்தையொட்டி இன்று காலை கார்கில் வந்த பிரதமர் மோடி, போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தான் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை” என்றார்.

மேலும், “கார்கில் போருக்குப் பிறகும் பாகிஸ்தான் தனது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுபவர்களின் மோசமான நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது.

பயங்கரவாதத்தை நசுக்கி, எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு நமது தேசம் தலைவணங்குகிறது” என்றார் பிரதமர் மோடி.