மஹாராஷ்டிரத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சியில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது 26 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆன்வி காம்தார் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இவருக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் மஹாராஷ்டிரத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு சென்ற ஆன்வி காம்தார், அங்கு ரீல்ஸ் எடுக்க முயற்சித்தபோது எதிர்பாராத வகையில் தவறி விழுந்தார்.
300 அடி பள்ளத்தில் விழுந்த அவரை மீட்புப்படையினர் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.