கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.டி. குமார் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எஸ். டி. குமார் பேசியதாவது:
“கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்பதுக்கூட தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.