பிரதமர் மோடி ANI
இந்தியா

வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் இரவு 9 மணி நிலவரப்படி 73.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 80.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு:

"முதற்கட்ட வாக்குப்பதிவின் முடிவில் நல்ல கருத்துகள் வருகின்றன. இன்றைய நாளில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நாட்டு மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.