ANI
இந்தியா

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம்: ஒப்புக் கொண்ட தயாரிப்பு நிறுவனம்

யோகேஷ் குமார்

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. இது கோவிஷீல்ட் என்ற பெயரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தப்பட்டது.

இதன் பிறகு பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி ஸ்காட் என்ற நபர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் தன்னுடைய மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில், “கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்” என இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை சுமார் 174.94 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.