கோப்புப் படம் ANI
இந்தியா

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

யோகேஷ் குமார்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப். 15 அன்று தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் நாடு முழுவதும் 87.98 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இது கடந்த ஆண்டை விட அதிகம். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வெழுதிய பெண் மாணவர்களில் 91.52 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆண் மாணவர்களைவிட 6.40 சதவீதம் கூடுதலாக பெண் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தேர்வெழுதியவர்களில் 85.12 சதவீத ஆண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மண்டல வாரியான தேர்ச்சியைப் பொறுத்தவரையில் திருவனந்தபுரம் 99.91 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்தது. சென்னையில் 98.47% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.