இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தெ.ஆ. கேப்டன் மார்க்ரமும் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்கைத் தேர்வு செய்யவிருந்ததாகக் கூறினார்.
டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படோஸில் மோதுகின்றன.
அரையிறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.
தெ.ஆ. அணி ஆப்கானிஸ்தானை 56 ரன்களுக்குச் சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை.
இறுதிச் சுற்றை பொறுத்தவரை இரு அணிகளுமே அரையிறுதியில் விளையாடிய அதே 11 வீரர்களுடன் களமிறங்குகின்றன.