கேகேஆர் அணி தன்னை தக்கவைக்காத பட்சத்தில் ஆர்சிபி அணியில் விளையாட விரும்புவதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களைத் தக்கவைப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் ஐபிஎல் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
எனவே, ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் தொடருவார்கள்? எந்தெந்த வீரர்கள் வேறு அணிக்கு மாறுவர்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் டாக் யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவரிடம், “கேகேஆர் அணி உங்களை தக்கவைக்கவில்லை என்றால், வேறு எந்த அணியில் விளையாட விருப்பப்படுகிறீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ரிங்கு சிங், ஆர்சிபி அணியைத் தேர்வு செய்தார். அவர் சொன்ன காரணம், விராட் கோலி அந்த அணியில் இருப்பதனால்.
ஐபிஎல் போட்டியிலிருந்து டிகே விலகியுள்ளதால் ஆர்சிபி அணிக்கு ஒரு நல்ல ஃபினிஷர் தேவைப்படுகிறார்.
இந்நிலையில் ரிங்கு சிங் ஆசைப்பட்டது போல் ஆர்சிபி அணிக்கு செல்வாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.