மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 5-வது நாளான இன்று மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவில் தீபிகா குமாரி பங்கேற்றார்.
இதில், 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் வில்வித்தை காலிறுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி தகுதி பெற்று அசத்தியுள்ளார்.