டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு 
விளையாட்டு

முதல் டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது

அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோர் தங்களது முதல் டி20 ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.

யோகேஷ் குமார்

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. அனைத்து ஆட்டங்களும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோர் தங்களது முதல் டி20 ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.

இந்திய அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அவேஷ் கான், கலீல் அஹமது, முகேஷ் குமார்.