ANI
விளையாட்டு

பிரிஸ்பேன் டெஸ்டில் டிராவிஸ் ஹெட் சதம்!

ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

கிழக்கு நியூஸ்

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

3-வது டெஸ்டில் முதல் நாளின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 2-வது நாளின் முதல் பகுதியில் இந்திய அணி ஓரளவு நன்றாகப் பந்துவீசி ஆஸி. அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி, 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸி. அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. முக்கியமாக, டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்கள் எடுத்து இந்திய அணியின் திட்டங்களை தகர்த்தார். ஸ்மித்தும் நம்பிக்கையுடன் விளையாடி ரன்கள் எடுத்ததால் இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. ஸ்மித் 128 பந்துகளிலும் ஹெட் 71 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள். இதன்பிறகு விரைவாக ரன்கள் குவித்த ஹெட், 115 பந்துகளில் தனது 9-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். இந்தியாவுக்கு எதிரான 3-வது சதம்.

தேநீர் இடைவேளையின்போது ஆஸி. அணி 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாளின் 2-வது பகுதியில் மட்டும் 130 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன.