நிரோஷனா 
விளையாட்டு

இலங்கை அணியின் முன்னாள் யு-19 கேப்டன் படுகொலை!

யோகேஷ் குமார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் யு-19 கேப்டன் தமிகா நிரோஷனா அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2000, 2002-ல் இலங்கை யு-19 அணியில் விளையாடிவர் நிரோஷனா. 2002-ல் கேப்டனாக செயல்பட்ட இவரது தலைமையில் ஏஞ்சலோ மேத்யூஸ், தரங்கா ஆகியோர் விளையாடினர்.

12 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 8 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் பங்கேற்ற இவருக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் இலங்கையில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிரோஷனா அவரது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வேறெந்த தகவலும் இதுவரை தெரியாத நிலையில், காவல் துறையினர் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.