ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான நடப்பு ஐபிஎல் பருவத்தின் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
குவாஹாத்தியில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30-க்கு ஆட்டம் தொடங்கவிருந்தது.
மழையால் டாஸ் போடுவது தாமதமானது.
மழை நின்றவுடன், இரவு 10.25 மணியளவில் மைதானதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
ஆய்வின் அடிப்படையில், இரு அணிகளுக்கும் தலா ஏழு ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இரவு 10.45 மணிக்கு ஆட்டம் தொடங்கவிருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது.
குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் ஆட்டமாக விளையாடுவதற்கு, ஆட்டம் இரவு 10.56-க்கு தொடங்கியிருக்க வேண்டும்.
எனினும், மழை குறுக்கீட்டால் இரவு 10.56-க்கு ஆட்டம் தொடங்கவில்லை. இதனால், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார்கள்.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளன.
கேகேஆர் 20 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 17 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸை சமன் செய்துள்ளது. எனினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன.
இதன்மூலம், குவாலிஃபையர் 1-ல் விளையாடும் வாய்ப்பை ராஜஸ்தான் இழந்துள்ளது.
குவாலிஃபையர் 1:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் v சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நாள்: மே 21
இடம்: அஹமதாபாத்
எலிமினேட்டர்:
ராஜஸ்தான் ராயல்ஸ் v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
நாள்: மே 22
இடம்: அஹமதாபாத்