படம்: https://x.com/FIDE_chess
விளையாட்டு

செஸ் உலகக் கோப்பை 2025 இந்தியாவில் நடைபெறும்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு | Chess World Cup

அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

செஸ் உலகக் கோப்பை 2025 இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் உலகக் கோப்பை 2025-ல் மொத்தம் 206 வீரர்கள் நாக்அவுட் முறையில் போட்டியிடுவார்கள். தோல்வியடையும் வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றும் மூன்று நாள்கள் நடைபெறும். முதலிரு நாள்கள் கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். மூன்றாவது நாளில் தேவைப்பட்டால், டை-பிரேக் ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வீரர்கள் 50 பேர் முதல் சுற்றில் பங்கெடுக்க மாட்டார்கள். தரவரிசையில் 51 முதல் 206-வது இடத்தில் உள்ள வீரர்கள் முதல் சுற்றில் மோதிக் கொள்வார்கள். செஸ் உலகக் கோப்பை 2025-ல் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 2026 கேன்டிடேட்ஸ் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவார்கள்.

இந்தியா அண்மைக் காலமாக செஸ் போட்டிகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் 2022, இளையோர் யு20 உலக சாம்பியன்ஷிப் 2024, மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் 5-வது லெக் (ஏப்ரல் 2025) ஆகியவை இந்தியாவில் நடைபெற்றன. எனவே, செஸ் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது சரியானதாக இருக்கும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு கருதியுள்ளது.

Chess World Cup | FIDE Chess | International Chess Federation | FIDE World Cup 2025