@FIDE_chess
விளையாட்டு

உலக செஸ்: 2-வது ஆட்டம் டிரா!

2-வது சுற்றின் முடிவில் டிங் லிரன் 1.5 - 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.

யோகேஷ் குமார்

குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்று டிராவில் முடிந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷும் சீனாவின் டிங் லிரனும் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று (நவ.25) தொடங்கியது.

டிசம்பர் 14 வரை கிளாசிகல் முறையில் 14 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தேவைப்பட்டால் டை பிரேக் முறை பயன்படுத்தப்படும். சாம்பியன் பட்டம் பெற 7.5 புள்ளியைப் பெற வேண்டும்.

இதன்படி குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரன், குகேஷை வீழ்த்தி ஒரு புள்ளியுடன் முன்னிலை பெற்றார்.

இந்நிலையில் இன்று 2-வது சுற்று நடைபெற்றது. ஆரம்பம் முதல் இருவரும் சிறப்பாக விளையாட இந்த ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் 2-வது சுற்றின் முடிவில் டிங் லிரன் 1.5 - 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.

3-வது சுற்று நாளை (நவ. 27) நடைபெறவுள்ளது.