பாய்சங் பூட்டியா ANI
விளையாட்டு

இந்திய கால்பந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்: அதிருப்தியில் பதவி விலகிய பாய்சங் பூட்டியா!

யோகேஷ் குமார்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்க்கெஸ் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக இருப்பார்.

இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் போது தன்னைப் புறக்கணித்ததாகவும், தன்னிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக, பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.