ANI
விளையாட்டு

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட்!

யோகேஷ் குமார்

ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கைவிடப்பட்டது.

ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தை கிரேட் நொய்டாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த செப். 9 அன்று தொடங்குவதாக இருந்த இந்த ஆட்டம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது.

இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மழையின் தாக்கத்தால் ஆடுகளம், அவுட் ஃபீல்டு மிகவும் மோசமான நிலையில் அடுத்த 4 நாள்களும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தியாவில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக 7 முறை இதுபோன்று நடந்துள்ளது. 1998-க்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு டெஸ்ட், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.