@ColorsTvTamil
@ColorsTvTamil
தற்போதைய செய்திகள்

நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு: நடிகர் வேதனை

யோகேஷ் குமார்

அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி நடிப்பில் வி. ப்ரியா இயக்கத்தில் உருவான ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இத்தகவல் இயக்குநர், நடிகர்களுக்கே தெரியாது என்று அப்படத்தில் நடித்த வசந்த் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது என கலர்ஸ் தமிழ் சேனல், ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்த வசந்த் ரவி தனது X தளத்தில் கூறியதாவது:

“இது உண்மையா?. புகழ்பெற்ற ஜியோ தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்ற ப்ரோமோவை பார்த்தவுடன் வேதனையாக உள்ளது.

இத்தகவல் இயக்குநர் மற்றும் இப்படத்தில் நடித்த நடிகர்கள் யாருக்குமே தெரியாது. இந்த தகவலை X தளத்தின் மூலமாக மட்டுமே எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.

ஒரு படம் தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்பட்டவுடன், வணிக ரீதியான முடிவு எடுப்பதில் ஒரு படைப்பாளி கருத்து சொல்ல முடியாது. ஆனால் இதுபோன்ற தகவலை இணையம் வாயிலாக இல்லாமல், நேரடியாக தெரிவிக்கவேண்டும்” என்றார்.