தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை அதிரடி உயர்வு | Gold Rate |

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 83,440-க்கு விற்பனை....

கிழக்கு நியூஸ்

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 83,000-ஐ தாண்டியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதன்படி இன்று (செப். 22) காலை 22 காரட் தங்கம், கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 10,360-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 82,880-க்கும் விற்பனை ஆனது.

இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலை 200% உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஒரே நாளில் 2-வது முறையாகவும் தங்கம் விலை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்தது போல், பிற்பகலில் மீண்டும் அதிரடியாக ரூ. 560 உயர்ந்தது. அதன்படி தற்போது ஒரு சவரன் ரூ. 1,120 உயர்ந்து ரூ. 83,440-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் கிராம் ஒன்றுக்கு மீண்டும் ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 10,430-க்கு விற்பனை ஆகிறது.

அதே போல, 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,640- க்கும், சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 69,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ. 148-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,48,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.