பும்ரா
பும்ரா ANI
தற்போதைய செய்திகள்

விதிமுறையை மீறிய பும்ரா: அபராதப் புள்ளியை வழங்கிய ஐசிசி

யோகேஷ் குமார்

ஐசிசியின் விதிமுறையை மீறியதாகக் கூறி பும்ராவிற்கு ஒரு அபராதப் புள்ளியை வழங்கியது ஐசிசி.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் பும்ரா ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு ஒரு அபராதப் புள்ளியை வழங்கி ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில், இங்கிலாந்து வீரர் ஆலி போப் ரன் ஓடும் போது, பும்ரா குறுக்கே வந்து, அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தினார். இதனை வேண்டுமென்றே பும்ரா செய்ததாகக் கூறி ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இது லெவல் 1 மீறலாகக் கருதி, பும்ராவுக்கு ஒரே ஒரு அபராத புள்ளியை மட்டும் ஐசிசி வழங்கியுள்ளது.

மேலும், கடந்த 24 மாதங்களில் பும்ராவுக்கு இது முதல் விதிமீறல் என்பதால், அடுத்த 24 மாதங்களில் இதுபோன்ற மீறல்கள் ஏதேனும் இருந்தால் அவருக்குத் தடை விதிக்கப்படலாம்.