மோகன் நடராஜன் காலமானார்! 
சினிமா

நடிகர், தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்!

யோகேஷ் குமார்

நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

நம்ம அண்ணாச்சி, சக்கரை தேவன், கோட்டை வாசல், புதல்வன், மகாநதி போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் மோகன் நடராஜன்.

1986-ல் வெளியான பூக்களைப் பறிக்காதீர்கள் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர் கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வத்திருமகள் உட்பட பல படங்களைத் தயாரித்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சென்னையில் நேற்று காலமானார்.

இன்று மாலை 3 மணியளவில் திருவொற்றியூரில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. நடிகர் சூர்யா உட்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.