வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் உருப்படியான திட்டங்களைச் செயல்படுத்துமாறு பாடலாசிரியர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துபாய்க்கு சென்றுள்ள வைரமுத்து அங்குள்ள ஒரு குப்பைமேடு அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தைப் பகிர்ந்து தனது பாணியில் கவிதை மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வைரமுத்துவின் பதிவு
துபாயில் இருக்கிறேன்
எனக்குப் பின்னால்
மலைபோல் தெரிவது மலையல்ல
பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை
ஊருக்கு வெளியே கொட்டி
மண்ணிட்டு மூடிய குப்பைமேடு
இதில் துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை;
சுற்றுச்சூழல் மாசு இல்லை;
நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு
வெளிநாடு செல்லும்
அமைச்சர்களும் அதிகாரிகளும்
இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு
உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா