சூரி @sooriofficial
சினிமா

25 வருடத்திற்கு முன்பு வெறுங்கையோடு..: சூரி உருக்கம்

யோகேஷ் குமார்

என் கடைசி மூச்சுவரை கடுமையாக உழைத்து ரசிகர்ளை மகிழ்விப்பேன் என நடிகர் சூரி பேசியுள்ளார்.

கடந்த மே 31 அன்று துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் கருடன். முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

சூரி பேசியதாவது:

“கருடன் வெளியாகி ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கருடன் படத்தை இவ்வளவு பெரிய வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. 25 வருடத்திற்கு முன்பு வெறுங்கையோடு சென்னைக்கு வந்த சூரியை நான் மறக்கவில்லை. இன்று நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு ரசிகர்கள் தான் காரணம். என் கடைசி மூச்சுவரை உங்களை மகிழ்விக்க கடுமையாக உழைப்பேன்” என்றார்.