கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ படம் நாளை (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், ஃபியூயல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் தங்களுக்கு ரூ.1.60 கோடி பாக்கிப் பணத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், அதனை வழங்காமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் ஃபியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடி பணத்தை வழங்க வேண்டும் என்றும், அப்பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக ரூ.1.60 கோடி பாக்கிப் பணத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்திய நிலையில் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, கங்குவா படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகவுள்ளது.