ரூ. 200 கோடியை வசூல் செய்த மஞ்ஞும்மல் பாய்ஸ்
ரூ. 200 கோடியை வசூல் செய்த மஞ்ஞும்மல் பாய்ஸ் @manjummelboysthemovie
சினிமா

ரூ. 200 கோடியை வசூல் செய்த மஞ்ஞும்மல் பாய்ஸ்

யோகேஷ் குமார்

ரூ. 200 கோடியை வசூல் செய்த முதல் மலையாளப் படம் எனும் சாதனையைப் படைத்துள்ளது மஞ்ஞும்மல் பாய்ஸ்.

பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் தமிழகத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்த இலக்கை எட்டிய முதல் மலையாளப் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

2016-ல் வெளியான ‘புலி முருகன்’, 2019-ல் ‘லுசிஃபர்’, 2023-ல் ‘2018’, இந்தாண்டு பிப்ரவரியில் வெளியான ‘பிரேமலு’ ஆகிய மலையாளப் படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ அதிக வசூல் செய்த மலையாளப் படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சோபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் போன்ற பலர் நடித்த படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’.

இப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

படம் வெளியான முதல் நாளிலிருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் வெளியான ஒரே மாதத்தில் வசூலில் சாதனை செய்துள்ளது.