சினிமா

அமரன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க கோரிக்கை!

திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில்..

யோகேஷ் குமார்

அமரன் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் அக்.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமரன் படத்தை திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்துள்ளது.