இளையராஜாவுடன் பவதாரிணி
இளையராஜாவுடன் பவதாரிணி படம்: https://twitter.com/bhavatharini
சினிமா

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

கிழக்கு நியூஸ்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உடல்நலக் குறைவால் அவர் இலங்கையில் காலமாகியுள்ளார்.

இளையராஜா தற்போது இலங்கையில் இருப்பதாகவும், பவதாரிணியின் உடல் நாளை சென்னை கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளையராஜாவின் இசையில் ராசய்யா திரைப்படத்தில் 'மஸ்தானா மஸ்தானா' பாடலைப் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி. பாரதி திரைப்படத்தில் 'மயில் போல' பாடலைப் பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பவதாரிணி 2000-வது ஆண்டில் வென்றார். தென்றல் வரும் வழியில், ஒளியிலே தெரிவது, ஏதேதோ, காற்றில் வரும் கீதமே, மெஹெரெஸைலா என ஏராளமானப் பாடல்களைப் பாடியுள்ளார்.