இயக்குநர் சூர்ய பிரகாஷ் காலமானார் @realsarathkumar
சினிமா

மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் காலமானார்

யோகேஷ் குமார்

மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய, இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

தமிழில் மாணிக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மாயி, திவான், அதிபர் போன்ற படங்களை இயக்கியவர் சூர்ய பிரகாஷ். இதைத் தொடர்ந்து, வருசநாடு என்ற தலைப்பில் இவர் இயக்கிய ஒரு படம் இன்னும் வெளியாகாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

“நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது” என நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.