இயக்குநரும் எழுத்தாளருமான ஜெயபாரதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 77.
கடந்த 1979-ல் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான ‘குடிசை’ படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி. இப்படம் பல விருதுகளையும் பெற்றது.
இவர், ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’,‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். நண்பா நண்பா படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கடைசியாக, 2010-ல் ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார்.
வணிக சினிமா மீது ஈடுபாடு காட்டாமல், மாற்று சினிமா பாதையில் இயங்கி வந்தார் ஜெயபாரதி.
இந்நிலையில் நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயபாரதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.