கோப்புப்படம் 
சினிமா

என் வங்கிக் கணக்குக்கு ரூ. 1 கோடி பணப் பரிவர்த்தனையா?: அமீர் விளக்கம்

கிழக்கு நியூஸ்

போதைப் பொருள் வழக்கில் தன்னுடைய வங்கிக் கணக்குக்கு எந்தவித பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார்.

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து இயக்குநர் அமீரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 1 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக தொடக்கத்திலிருந்தே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ள அமீர், தான் எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையிலோ ஈடுபட்டது இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: