சினிமா

நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு!

ஏற்கெனவே நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

யோகேஷ் குமார்

நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீது ஆகஸ்ட் 29 அன்று ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், நடிகர்கள் ஜெயசூர்யா, பாபுராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.